பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது 23 வயது சட்ட கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தெரிவித்தார்.
மாணவியின் புகாரைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சின்மயானந்த் பின்னர் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதான சின்மயானந்த்க்கு ஜாமீன் மனு மறுக்கப்பட்ட நிலையில் திங்கள் மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் ஷாஜகான்பூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
லக்னோவில் உள்ள எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவில் 8 நாட்கள் கழித்த பின்னர் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் பாலியல் பலாத்கார குற்றம் சாட்டிய சட்டக்கல்லூரி மாணவி மீது வீடியோவை காட்டி பணம்பறித்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டது. தற்போது அந்த மாணவி சிறையில் உள்ளார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, அவர் குற்றத்தை ஒப்புகொண்டதாக தெரிவித்துள்ளனர்.